×

2.5 கோடி போதை மாத்திரை பறிமுதல்

சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா செல்லும் சரக்கு விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட தயாரானது. அதில் அனுப்ப இருந்த பார்சல்களை சுங்கத்துறையினர் சோதனை செய்தபோது, ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப வந்த 3 பார்சல்களில், வலி நிவாரணி மாத்திரைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. சந்தேகத்தின் பேரில், அவற்றை பிரித்து பார்த்தபோது, எபிட்டிரீன் என்ற போதை மாத்திரைகள் மற்றும் போதை பவுடர்கள் 27 கிலோ  இருந்தன. அதை பறிமுதல் செய்தனர். அதன்  மதிப்பு ₹2.5 கோடி. மேற்கண்ட பார்சல்களில் இருந்த முகவரி, போன் நம்பர்கள் போலியானவை என தெரியவந்தது. இதையடுத்து அந்த பார்சல்களை எந்த ஏஜென்சி பதிவு செய்து அனுப்பியது என்று விசாரிக்கின்றனர்.

Tags : drug pill , 2.5 crore drug pill confiscated
× RELATED வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினால் போதை...